உலக செய்திகள்

தென் கொரியாவில் அதிவேக படகில் குண்டுவெடிப்பு: கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம்

தென் கொரியாவில் அதிவேக படகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி, கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சியோல்,

தென்கொரியாவின் தென்கடல் பகுதியில் நேற்று முன்தினம் கடற்படை வீரர்கள் 30 பேர் அதிவேக படகு ஒன்றில் சவாரி செய்து, துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு அந்த அதிவேக படகுக்குள் பலத்த சத்தத்துடன் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த குண்டு வெடித்ததின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலிலும், கடலுக்கு வெளியிலும் நடந்து வந்த துப்பாக்கி சூடு பயிற்சிகளை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து