உலக செய்திகள்

தென் கொரியாவில் அதிவேக படகில் குண்டுவெடிப்பு: கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம்

தென் கொரியாவில் அதிவேக படகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி, கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சியோல்,

தென்கொரியாவின் தென்கடல் பகுதியில் நேற்று முன்தினம் கடற்படை வீரர்கள் 30 பேர் அதிவேக படகு ஒன்றில் சவாரி செய்து, துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு அந்த அதிவேக படகுக்குள் பலத்த சத்தத்துடன் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த குண்டு வெடித்ததின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலிலும், கடலுக்கு வெளியிலும் நடந்து வந்த துப்பாக்கி சூடு பயிற்சிகளை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது.

SCROLL FOR NEXT