Image courtesy : ANI 
உலக செய்திகள்

இலங்கையில் அனைத்து பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து பாதுகாப்பு படையினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கையில் தற்போது அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இலங்கையில் அனைத்து படையினரின் விடுமுறைகளும் ரத்து செய்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்