உலக செய்திகள்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை மூடுவேன் - டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை மூடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் அதிகளவில் குடியேறுவது தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்துக்குள் எல்லைப் பகுதியை மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிகோ எதையும் செய்வதில்லை. அவர்கள் பேசத்தான் செய்கிறார்களே தவிர செயலில் காட்டுவதில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வேடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பணத்தை பல்லாண்டு காலமாக எடுத்துச்செல்கின்றனர். தெற்கு எல்லையை மூடி விட எண்ணுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் டிரம்ப், நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் அல்லது எல்லையின் பெரும்பகுதியை மூடி விடுவேன் என கூறி உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்