உலக செய்திகள்

லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலி

லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலியாயினர்.

தினத்தந்தி


* சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள யுவான்யாங் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த நகரம் வெள்ளக் காடாகி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிர் இழந்ததாகவும், 6 பேர் மாயமாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* லிபியாவின் தெற்கு பகுதியில் உள்ள முர்ஷாக் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த மத்திய தேர்தலின் போது ஜனாதிபதி டிரம்பை விமர்சித்த முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹலாரி கிளிண்டன் உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டுகளை பார்சல் அனுப்பிய வழக்கில் செஸர் சயோக் (வயது 57) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* காங்கோ நாட்டின் காசாய் மாகாணத்தில் உள்ள லுகென்யே ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு பாரம் தாங்காமல் தண்ணீரில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்