கோப்புப்படம் 
உலக செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்து ‘ஆஸ்இண்டெக்ஸ்’ எனும் கூட்டு ராணுவ பயிற்சி!

இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்து ஆஸ்இண்டெக்ஸ் எனும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன.

தினத்தந்தி

கன்பெர்ரா,

ஆஸ்திரேலியாவின், ராயல் ஆஸ்திரேலியன் கடற்படை, இந்தியாவின் கடற்படையுடன் இணைந்து ஆஸ்இண்டெக்ஸ் (AUSINDEX ) எனும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய கடற்பகுதியில் இந்த வாரம் முழுவதும் நடைபெறுகிறது.

ஆஸ்இண்டெக்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி 2015 முதல் நடந்து வருகிறது. கடந்த 2019-ல் நீர்மூழ்கி கப்பல் முறியடிப்பு பயிற்சியை இந்தியா இந்த ஒத்திகையின்போது பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் குவாமில் நடந்த மலபார் 21 பயிற்சியின் நீட்சியாக இந்த பயிற்சி மீண்டும் நடக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆஸ்இண்டெக்ஸ் பயிற்சி ஞாயிறு அன்று தொடங்கி உள்ளதாகவும், வரும் 13-ந்தேதி வரை பயிற்சி நடைபெறும் என்றும் கூறி உள்ளது.

நவீன கடற்படை போர் யுத்திகள் ஒத்திகை பார்க்கப்படுகின்றன. இருதரப்பு ராணுவத்தின் கூட்டு மற்றும் இயங்கு திறனை இந்திய பசிபிக் மண்டலத்தில் நிறுவுவதாக இந்த பயிற்சி அமையும். இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் சிறந்த ராணுவ பங்காளிகள். கடற்சார் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவை உறுதிப்படுத்தும் விதமாக ராணுவ பயிற்சியை பகிர்ந்துகொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்