உலக செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் - சர்வதேச நிதியம்

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் பவுலோ மவுரோ, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவின் கடன் விகிதம், இந்த ஆண்டு இறுதிக்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதமாக இருக்கும். இது, பல்வேறு வளரும் நாடுகளை விட அதிகம்.

இருப்பினும், இந்தியாவுக்கு எளிதில் தாங்கிக் கொள்ளக்கூடியதாகவே இருக்கும். இந்தியாவின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ளது. இதுவும் வளரும் நாடுகளை விட சற்று அதிகம். நிதி பற்றாக்குறையை குறைப்பது அவசியம்.

ரொக்க பரிமாற்றம், மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை இந்தியா குறைத்தது, கார் வைத்திருப்பவர்களுக்குத்தான் பலன் அளித்துள்ளது. அதனால், வரி குறைப்பை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து