உலக செய்திகள்

'அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க தரப்பு தான்' - ஈரான் குற்றச்சாட்டு

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க தரப்பு தான் என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி நாசர் கனானி குற்றம் சாட்டினார்.

தினத்தந்தி

டெஹ்ரான்,

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம், கூட்டு விரிவான செயல்திட்டம் என அழைக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. இதன்படி ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு கைமாறாக அணுசக்தி திட்டத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

ஆனால் 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதுடன், ஒரு சார்பாக ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்தது. இதைத்தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்ததின் சில விதிகளை தளர்த்துவதாக ஈரான் தெரிவித்தது.

இந்நிலையில் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ஈரான் தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு அமெரிக்காவுக்கு காலவரையின்றி அனுமதி இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக்த்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்தார்.

டெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உரிய தரப்புகளுடன் இணைந்து பேச்சுவார்த்தையை நிறைவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், அதே வேளையில் நாட்டின் நலன்களை ஈரான் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்க தரப்பு தான் என்று குற்றம் சாட்டிய அவர், தூதரக அளவில் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாளரம் காலவரையின்றி அமெரிக்காவுக்கு திறக்கப்படாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்