உலக செய்திகள்

ஐரோப்பா மிரட்டினால் ராக்கெட் வீச்சின் எல்லை அதிகரிக்கப்படும்: ஈரான்

ஈரானை ஐரோப்பா மிரட்டினால் எங்களது ராக்கெட் வீச்சின் எல்லை அதிகரிக்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கெட் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது. இதனால் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் உள்ளன.

இந்த நிலையில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் துணை தலைவரான சலாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் ராக்கெட்டுகளின் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது என்றால் அது தொழில்நுட்ப பற்றாக்குறையினால் அல்ல. நாங்கள் ராணுவ கொள்கையினை பின்பற்றி வருகிறோம் என கூறினார்.

தொடர்ந்து அவர், ஐரோப்பா எங்களுக்கு மிரட்டலாக இல்லை என நாங்கள் நீண்ட நாட்களாக கருதி வந்தோம். அதனால் ராக்கெட்டுகள் வீச்சின் எல்லையை நாங்கள் அதிகரிக்கவில்லை. ஆனால், ஐரோப்பா மிரட்டல் விட விரும்பினால், எங்களது ராக்கெட் வீச்சின் எல்லையை அதிகரிப்போம் என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்