உலக செய்திகள்

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேர் கொலை

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

திரிபோலி,

லிபிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் அதிபர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது.

கடந்த பிப்ரவரியில், ஜப்ரா நகரில் உள்ள சோதனை சாவடி மீது நடந்த தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி அழிக்கப்பட்டது. பல வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் லிபியாவின் மத்திய நகரான ஜப்ராவின் பியுகா பகுதியில் 10 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

அவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே ஜப்ரா நகர மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அவர்களில் 6 பேரை கொன்று விட்டோம் என தீவிரவாதிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை ஜப்ராவின் டீன் ஹசூனா உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

கடந்த அக்டோபரில் ஜப்ரா நகரின் பியுகா பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்று இருந்தனர். ராணுவ வீரர்கள் பலரை கொன்றும், பலரை பிடித்து சென்றும் மற்றும் அவர்களது வீட்டை எரித்தும் உள்ளோம் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு