உலக செய்திகள்

900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையை கைபற்றியது இஸ்ரேல்

வடக்கு பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியை நிறைவு செய்ய நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம்.

ஜெருசலேம்,

20-வது நூற்றாண்டின் இறுதியில் 1982 முதல் 2000 வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2026 லெபனான் போரின் போது, இந்த மாதம் மீண்டும் இஸ்ரேல் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா

ஈரானின் அதரவு பெற்ற இயக்கமான ஹிஸ்புல்லா தனது முக்கிய தாக்குதல் தளமாக இதை பயன்படுத்தி வந்தது. 2000-ம் ஆண்டு லெபனானிடம் ஒப்படைத்த இந்த பியூபோர்ட் கோட்டையை, மீண்டும் 26 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது.

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காட்ஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

பியூபோர்ட்டுக்கான வீரமிக்க போர் நடந்து 44 ஆண்டுகளுக்கு பிறகு, மற்றும் 'கலிலேயாவுக்கான அமைதி போரில்' வீரமரணம் அடைந்தவர்களின் நினைவு நாளில், பியூபோர்ட் போரில் வீரமரணம் அடைந்த கோலானி படைப்பிரிவு வீரர்கள் உட்பட கோலானி படைப்பிரிவின் தலைமையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) வீரர்கள் பியூபோர்ட்டின் கோட்டையை அடைந்தனர், அதன் மீது மீண்டும் ஒருமுறை இஸ்ரேலின் கொடியையும் கோலானியின் கொடியையும் ஏற்றினர்.

பியூபோர்ட் கைப்பற்றியது

பிரதமர் நெதன்யாகுவின் வழிகாட்டுதலின் பேரிலும், எனது வழிகாட்டுதலின் பேரிலும், இஸ்ரேலிய பாதுகாப்பு படை லெபனானில் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தி, லிட்டானி ஆற்றை கடந்து, பியூபோர்ட் கைப்பற்றியது. இது கலிலேயாவின் குடியிருப்புகளை பாதுகாப்பதற்கும் நமது படைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமானதாகும். இன்று, எதிரிக்கு தகவல் சென்றடைவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையின் மீது திணிக்கப்பட்டிருந்த இரகசிய திரை விலக்கப்பட்டுள்ளது.

வணக்கம்

இது நமது எதிரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி: இஸ்ரேலிய குடிமக்களை அச்சுறுத்தும் எவரும், தங்களது மூலோபாய சொத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக இழப்பார்கள். தாய்நாட்டிற்காக நமது நாயகர்கள் உயிர்நீத்த இந்த இடத்தில், இஸ்ரேலிய வீரத்தின் மற்றொரு அத்தியாயத்தை எழுதிய கோலானி போராளிகளுக்கும் அனைத்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு படை வலிமையாக உள்ளது, மேலும் ஹிஸ்புல்லாவின் அதிகாரத்தை நசுக்கி, வடக்கு பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியை நிறைவு செய்ய நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.