உலக செய்திகள்

இஸ்ரேலில் 1989-க்குப் பிறகு கண்டறியப்பட்ட முதல் போலியோ தொற்று..!

இஸ்ரேலில் 1989-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் போலியோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜெருசலேம்,

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் 4 வயது குழந்தைக்கு போலியோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டில் கடந்த 1989-ம் ஆண்டுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ள முதல் போலியோ தொற்று இதுவாகும்.

இஸ்ரேலில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை அந்த குழந்தை செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமின் வட்டார சுகாதாரத்துறை ஆணையம் இதுகுறித்த தொற்றுநோயியல் ஆய்வை தொடங்கியுள்ளது. மேலும் அந்த குழந்தையையும் குழந்தையின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

மேலும் இந்த தொற்றுக்கு காரணம் போலியோ வைரசின் புதிய திரிபு என்றும் போலியோ தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தாக்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு