உலக செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பொதுமக்கள் பாதுகாப்பே முதன்மையானது - ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுவதாக அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாளத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், "பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது" என்று அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார். 

The protection of civilians is paramount.

The Laws of War establish clear rules to protect human life and respect humanitarian concerns.

Those laws cannot be contorted for the sake of expedience.

Antnio Guterres (@antonioguterres) October 29, 2023 ">Also Read:

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு