உலக செய்திகள்

ரூ.5,684 கோடி மதிப்பில் ராக்கெட்டுகள் வாங்க இஸ்ரேலுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தம்

இந்திய கப்பற்படைக்கு தரையில் இருந்து விண்ணில் சென்று நீண்ட தொலைவை தாக்கும் ராக்கெட்டுகளை வாங்குவதற்காக ரூ.5,684 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ஒன்று இஸ்ரேலுடன் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நிறுவனங்களுடன் இந்தியா நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. பல்வேறு பெரிய அளவிலான ஒப்பந்தங்களையும் அவற்றுடன் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மிக பெரிய விண்வெளி மற்றும் ராணுவ நிறுவனம் ஆக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் (ஐ.ஏ.ஐ.) என்ற நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் இந்திய கப்பற்படையில் உள்ள 7 கப்பல்களுக்கான ராக்கெட்டுகளை வழங்க உள்ளது. இந்த ராக்கெட்டுகள் தரையில் இருந்து விண்ணில் சென்று நீண்ட தொலைவை தாக்கும் பாரக் 8 ரக வகையை சேர்ந்தவை.

இதற்காக இஸ்ரேலுடன் ரூ.5,684.53 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று இந்தியாவுடன் இன்று கையெழுத்திடப்பட்டது. இந்த திட்டத்திற்கான முக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆக இந்தியாவின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை