ஜெருசலேம்,
ஜெருசலேம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஏற்கெனவே மோதல் இருந்து வந்தது. தற்போது காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினரும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி வருகின்றனா. அதன் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா. முக்கியமாக காசா மக்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனா. கடந்த சில நாள்களாகத் தொடரும் மோதலால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இஸ்ரேலும் காசாவும் தங்களுக்கான சண்டையை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பல வலியுறுத்தியுள்ளபோதிலும் மோதல் தொடாந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் இருந்த 6 மாடிக் கட்டடம் தகாந்தது. அக்கட்டடத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நூலகம், கல்வி மையங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில், இஸ்ரேலின் செலுத்திய குண்டுவெடிப்பில் சிக்கி 63 குழந்தைகள் உட்பட 217 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒரு வாரத்தில் 1,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதல் தொடாந்து வருவதால் காசாவில் குடிநீ, மருந்துப் பொருள்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகச் செயல்படும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பாலஸ்தீனாகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா.
காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினா மீது தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல்-காசா மோதல் தற்போது தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக பேசிய அவர், இஸ்ரேல்-காசாவில் நிகழும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் தவறான திசையில் சென்று கொண்டிருகின்றன. இதன் பொருள் நாம் ஒரு நிலையான சமாதானத்தை நோக்கி ஒரு பாதையை, மிகவும் கடினமாக்குகிறோம்.
மோதல் தீவிரவாதிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது எங்கள் நாட்டில் மிகவும் சகிப்புத்தன்மையற்ற குரல்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அனைத்து தரப்பினரும் சமாதானமாக செல்வதை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.