கோப்புப்படம் 
உலக செய்திகள்

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஜப்பான்..!!

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மூன்று நபர்களுக்கு மரண தண்டனையை ஜப்பான் அரசு நிறைவேற்றி உள்ளது.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய மூன்று நபர்களுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜப்பானில் கிஷிடா-கியோடா பிரதமராக பதவி ஏற்றபின் வழங்கப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவாகும்.

தூக்கிலிடப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதி அமைச்சர் யோஷிஹிசா புருகாவா, இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.

முன்னதாக ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 2003-ல் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு தற்போது இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சர் யோஷிஹிசா புருகாவா உத்தரவின் பேரில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே யோஷிஹிசா புருகாவா, தனது பதவியை ஏற்கும் போதே, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்தவருக்கு வழங்கப்படும் மரண தண்டனை தவிர்க்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

ஜப்பானில் மனித உரிமை குழுக்கள் மற்றும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் இருந்தபோதிலும் மரண தண்டனைக்கான பொது ஆதரவு அங்கு அதிகமாக உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்