உலக செய்திகள்

ஜவாத் புயல் எதிரொலி: வங்காள விரிகுடாவில் 21 மீனவர்களுடன் கவிழ்ந்த படகு

ஜவாத் புயல் எதிரொலியாக வங்காள விரிகுடாவில் படகு கவிழ்ந்ததில் 20 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

தினத்தந்தி

டாக்கா,

வங்காள விரிகுடாவில் 21 மீனவர்களுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் சென்ற படகு ஜவாத் புயல் எதிரொலியாக கடலில் கவிழ்ந்தது. இதில், படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

அவர்களில் ஹபிசூர் ரஹ்மான் என்பவரை மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், மற்ற 20 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர்களை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது