உலக செய்திகள்

தன்னைவிட அழகாக இருந்ததால் பொறாமை: தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி

தன்னைவிட அழகாக இருந்ததால் ஏற்பட்ட பொறாமையால், மாடல் அழகி ஒருவர் தன் தங்கையை கொடூரமாக கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா துப்ரோவினா (வயது 22). இவரது தங்கை ஸ்டெபானியா (17). தாய், தந்தை இல்லாததால் சகோதரிகள் இருவரும் சிறுவயதில் அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். வளர்ந்த பிறகு இருவரும் மாடலிங் துறையில் சேர்ந்தனர். எலிசவெட்டா மற்றும் ஸ்டெபானியா ஆகிய இருவருமே சிறந்த மாடல் அழகிகளாக விளங்கினர். அத்துடன் இருவரும் இணை பிரியா சகோதரிகளாக இருந்து வந்தனர். எனினும் தங்கை ஸ்டெபானியா தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் அவர் மீது எலிசவெட்டாவுக்கு பொறாமை இருந்து வந்தது.

இந்த பெறாமை அவரது கண்ணை மறைத்தது. தாய், தந்தைக்கு ஈடாக பாசத்தை கொட்டி வளர்த்த தங்கை என்றும் பாராமல் ஸ்டெபானியாவை கொலை செய்ய எலிசவெட்டா முடிவு செய்தார். கடந்த 2016-ம் ஆண்டில் ஒரு நாள், ஸ்டெபானியா தனது காதலர் அலெக்சி பதேவ் வீட்டுக்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி எலிசவெட்டாவும் சென்றார். அப்போது, அலெக்சி பதேவ் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

இதையடுத்து, தனியாக இருந்த ஸ்டெபானியாவை, எலிசவெட்டா கத்தியால் சரமாரியாக குத்தினார். தங்கையின் அழகின் மீது இருந்த பொறாமையின் உச்சக்கட்ட வெளிப்பாடாக அவரது உடலில் 189 முறை கத்தியால் குத்தினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். அப்படியும் அவர் ஆத்திரம் அடங்காததால் தங்கையின் வலது காதை அறுத்து எடுத்ததோடு, கண்களையும் நோண்டி எடுத்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை