உலக செய்திகள்

பாகிஸ்தானில் பெட்ரோல் நிலையத்தில் சிலிண்டர் வெடிப்பு; 4 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் 4 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வடக்கே நசீமாபாத் பகுதியில் அப்துல்லா கல்லூரி அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இதில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பில் 4 ஆண்கள் பலியானார்கள். 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த எண்ணிக்கையை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இது விபத்து போல் காணப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளனர். எனினும், வெடிப்புக்கான உண்மையான காரணம் பற்றி கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை