கோலாலம்பூர்,
ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக உலகின் மிகப்பெரிய ஆணுறை நிறுவனமான காரெக்ஸ் விலை உயர்வை அறிவித்துள்ளது. மலேசியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 500 கோடி ஆணுறைகளை உற்பத்தி செய்கிறது.
உலக அளவிலான ஆணுறை உற்பத்தியில் 5ல் ஒரு பங்கை காரெக்ஸ் கொண்டுள்ளது. டியூபெக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்காகவும் ஆணுறைகளை தயாரிக்கிறது.
விலை உயர்வு தொடர்பாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. கோ மியா கியாட் கூறியதாவது:-
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வானது, போக்குவரத்திலிருந்து நாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மூலப்பொருட்கள் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
செயற்கை ரப்பர் பற்றாக்குறை ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். மேலும் நைட்ரைஸ் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது விநியோகத்தை பெற முடிந்தாலும், அதன் விலைகள் ஏற்கனவே இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது.
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விநியோக சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் போர் பாதிப்புகள், சரக்கு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை. இதனால் ஆணுறைகளின் விலையை சுமார் 30 சதவிகிதம் வரை உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.