உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு

காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி தொலைபேசியில் பேசினார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நான் அவரிடம் விளக்கினேன். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வதேச சமுதாயத்துக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா. அதிகாரிகள் உறுப்பு நாடுகளுக்கு விளக்கியதற்காக நன்றி தெரிவித்தேன்.

ஐ.நா. பொதுச் செயலாளரும் பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது பதற்றத்தை தவிர்ப்பது குறித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு குரேஷி கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்