உலக செய்திகள்

காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம்: பிற நாடுகளுடனான உறவை பாதிக்காது - இந்திய தூதர் உறுதி

காஷ்மீரின் மறுசீரமைப்பு விவகாரத்தால், பிற நாடுகளுடனான உறவு பாதிக்காது என இந்திய தூதர் உறுதியளித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிரச்சினை, இந்தியாவின் உள் விவகாரம். நல்ல நிர்வாகத்தை நோக்கமாக கொண்ட நிர்வாகரீதியான முடிவு. இதன் காரணமாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கோ, சர்வதேச எல்லைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. பிற நாடுகளுடனான உறவிலும் பாதிப்பு ஏற்படாது.

இந்தியாவின் பிறபகுதி மக்களுக்கு கிடைத்து வரும் சமூக, பொருளாதார திட்டங்களின் பலன்கள், காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்