உலக செய்திகள்

இறந்தும் எச்சரித்த காமேனி? உலகையே அதிர வைத்த பதிவு

இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் தலைநகர் தெக்ரான் முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது 'எக்ஸ்' பக்கத்தில் இருந்து வெளியான திடீர் பதிவு உலகையே அதிர வைத்துள்ளது.

இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதன் விளைவுகள் அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும்" என நேரடியாக எச்சரித்துள்ள அந்தப் பதிவில், ஏவுகணைகள் ஏவப்படுவது போன்ற புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.