உலக செய்திகள்

பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை: குழந்தைகள் ஆபாச பட வழக்கில் அதிரடி தீர்ப்பு

குழந்தைகள் ஆபாச பட வழக்கில் கைதான பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லாகூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானை சேர்ந்தவர் சதத் அமின். இவர், குழந்தைகளை தொடர்புபடுத்தி ஆபாச படங்கள் எடுத்து, அந்தப் படங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் இப்படி குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பதை கிரிமினல் குற்றம் என ஆக்கி சட்டம் இயற்றினர். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நார்வே தூதரகம் செய்த புகாரின்கீழ், அமின் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 லட்சம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக அவர் மீது லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அமின் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்தது. மேலும், அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

பாகிஸ்தானில் குழந்தைகள் ஆபாச பட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் பாகிஸ்தானியர் என்ற பெயர் அமினுக்கு கிடைத்து உள்ளது. அமினுக்கு லாகூர் கோர்ட்டு ரூ.12 லட்சம் அபராதமும் விதித்து உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...