உலக செய்திகள்

உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்

சிங்கம் தாக்கியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தினத்தந்தி

பிரேசிலியா,

பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை காண நண்பர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர். அதில் மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஆர்வ மிகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு மரம் வழியாக கீழே இறங்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த ஒரு சிங்கம் அவரை தாக்கி இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்