கோப்புப்படம் 
உலக செய்திகள்

லண்டனில் கத்திக்குத்து சம்பவம்: 4 பேர் கொல்லப்பட்டனர் - சந்தேக நபர் கைது

லண்டனில் வீடு ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத்வார்க் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அருகில் இருந்தவர்களால் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அங்கு 4 பேர் கடுமையான கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் இருந்ததாகவும், அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும், அவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான சந்தேக நபருக்கு கொலை செய்யப்பட்ட நால்வரையும் ஏற்கனவே தெரியும் என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்