உலக செய்திகள்

மெக்சிகோ: 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 11 பேர் பலி - 25 பேர் பலத்த காயம்

மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலையில் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தினத்தந்தி


* சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட தென்கொரியாவுக்கு சொந்தமான 3 கப்பல்களை செங்கடல் அருகே ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். கப்பல்களில் இருந்த 16 பேரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

* மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலி மற்றும் நைஜர் நாடுகளின் ராணுவ படைகள் இணைந்து தங்கள் நாடுகளின் எல்லை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டு வீரர்கள் 24 பேர் பலியானார்கள். மேலும் 30 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

* மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டி மற்றும் பச்சுவ்கா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் 3 பஸ்கள் அடுத்தடுத்து, ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் தலீபான் தளபதி ஒருவர் உள்பட 14 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள், பதுங்குகுழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு