கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா: மெக்சிகோ அதிபர் அறிவிப்பு

அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்க நாட்டில் உள்ள பல மாகாணங்கள் தங்களது குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வருகிறது. இதனால் மத்திய அமெரிக்காவில் இருந்து வேலைக்காக அமெரிக்கா செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில் மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமானால் மெக்சிகோ நாட்டை கடக்க வேண்டும். அது அவர்களுக்கு வேலை கிடைப்பதில் மிகவும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், `மெக்சிகோவில் உள்ள ரெயில் பாதை போன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மனிதவளம் தேவைப்படுகிறது. எனவே மெக்சிகோவில் பணிபுரிவதற்காக மத்திய அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் மெக்சிகோவில் சட்டப்பூர்வமாக தங்கலாம்' என தெரிவித்தார்.

அதிபர் மானுவேலின் இந்த அறிவிப்பு மத்திய அமெரிக்கர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து