உலக செய்திகள்

இந்தியாவிடம் இருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி - மெக்சிகோ அதிபர் தகவல்

இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ சிட்டி,

இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா, ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசியானது, புதிய வகை கொரோனாவிடம் இருந்தும் பாதுகாப்பு வழங்கக் கூடியது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த மாத தொடக்கத்தில் மெக்சிகோவை வந்தடையும். இதேபோன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளும் மெக்சிகோவிற்கு வரவுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...