கார்ட்டும்,
சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் நிலைமை படுமோசமாக உள்ளது.
அங்குள்ள மக்கள் பசியைத் தாங்க முடியாமல் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் தின்று உயிர் பிழைக்கும் அவல நிலையில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 2.89 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். போர்க்களத்தில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும், உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டும் உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் உணவு தேடி வெளியே செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.
சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சமூக சமையல் கூடங்களும் மூடப்படும் நிலையில் உள்ளன.