உலக செய்திகள்

மொராக்கோவில் மரத்தில் பஸ் மோதி 11 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் மரத்தில் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ரபாட்,

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் வடக்கு மாகாணமான கெமிசெட்டில் ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ஆரம்பத்தில் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் பெண் விவசாயத் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு