உலக செய்திகள்

ஜாம்பியாவில் சுரங்க விபத்து; 8 தொழிலாளர்கள் பலி

ஜாம்பியாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பகுதியளவு இடிபாடுகளில் சிக்கி, மீட்கப்பட்ட ஓட்டுநர் உள்ளே நிறைய பேர் சிக்கியுள்ளனர் என போலீசிடம் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

லுசாகா,

ஜாம்பியா நாட்டின் லுசாகா மாகாணத்தில் சாங்வே மாவட்டத்தில் கட்டிட பணிகளுக்கு தேவையான கற்களை எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் நேற்று காலை பணியை முடித்தபோது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ரே ஹமூங்கா கூறும்போது, சுரங்கம் இடிந்து விழுந்தது பற்றிய தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இதில், ஓட்டுநர் ஒருவர் மீட்கப்பட்டார். பகுதியளவு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவர், நிறைய பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என கூறியுள்ளார். அவர்களை மீட்கும்படியும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், மீட்பு குழுவினர் 8 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

அந்த பகுதியில் சவாலான சூழல் காணப்பட்டது. இதனால், மீட்பு பணியில் நேற்று தொய்வு நிலை ஏற்பட்டது. மீட்பு பணியும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று மீட்பு பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு