உலக செய்திகள்

நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்பு

நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்றுக் கொண்டார்.

தினத்தந்தி

அபுஜா,

நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும், அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முகம்மது புஹாரி மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக நைஜீரியா அதிபராக முகம்மது புஹாரி இன்று பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான மஹ்மூத் யாக்குபு சுமார் ஒருகோடியே 13 லட்சம் வாக்குகளை (41சதவீதம்) பெற்று தோல்வியை தழுவினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்