உலக செய்திகள்

ஸ்காட்லாந்தில் கடும் பனிப்பொழிவால் 100 பள்ளிகள் மூடல்

வடக்கு பிராந்தியத்தில் கடும் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினத்தந்தி

எடின்பர்க்,

ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. எனவே சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக மாறின. அப்போது சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அபெர்டீன்ஷையர் நகர சாலையில் சென்ற மாடி பஸ் பனிக்கட்டிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மீட்பு படையினர் அந்த பனிக்கட்டிகளை அப்புறப்படுத்திய பிறகே பஸ் அங்கிருந்து புறப்பட்டது. இதனால் பல மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு பிராந்தியத்தில் கடும் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு