உலக செய்திகள்

இலங்கை போராட்டக் களத்தில் இசைக் கலைஞர் மரணம்

போராட்டத்தில் கலந்துகொண்ட ராப் பாடகரான ஷிராஸ் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிவிலகக்கோரி அந்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ராப் பாடகரான ஷிராஸ் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் போராட்டக்களத்தில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராப் பாடகர் ஷிராஸ் மறைவிற்கு பலரும் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்