நைப்பியிதோ,
இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
அரசுப்படையினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மெஹ்வே மாகாணம் மிண்டோன் நகரில் பியாங்க் பகுதியில் ராணுவத்தினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.