உலக செய்திகள்

இலங்கை அதிபருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.இந்த நிலையில் நேற்று காலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்த அஜித் தோவல் அவருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர். இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்