உலக செய்திகள்

நேபாளத்தில் லேசான நிலஅதிர்வு, ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

நேபாளத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது.

காத்மாண்டு,

நேபாளத்தில் இன்று காலை 8.21 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினார். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்ற எந்த தகவலும் இல்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாள நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுதிய இந்த நிலநடுக்கத்தால் கிட்டதட்ட 9 ஆயிரம் பலியாகினர். 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT