உலக செய்திகள்

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. தொற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஜோ பைடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த, சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், அதிபர் ஜோ பைடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இது குறித்து பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது;-

உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால், அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்கவேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த, இதுவரை இல்லாத வகையில், 2 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்தை துவக்கியுள்ளேன். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக, அமெரிக்கா தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவில், வேலை வாய்ப்புகள், வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரிக்கும். பொருளாதாரமும் மாபெரும் வளர்ச்சி பெறும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, அதிக முதலீடு செய்யப்பட்டது. அதன்பின், தற்போது தான், வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புக்காக அதிக முதலீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்