உலக செய்திகள்

நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை

விதி மீறும் நிறுவனங்களுக்கு வருவாயில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன்,

நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் புதிய சட்ட முன்மொழிவை கொண்டு வந்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதே இதன் நோக்கம் என்றார்.

இன்ஸ்டாகிராம், டிக்டாக், பேஸ்புக் போன்ற தளங்களில் பயனர்களின் வயதை உறுதிப்படுத்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். எனினும், ஆளும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அக்டோபர் 1-ந்தேதிக்குள் இந்த மசோதாவை நிறைவேற்ற போதிய கால அவகாசம் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைப்பதிலும் சிக்கல் உள்ளதால், இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.