உலக செய்திகள்

நியூசிலாந்து எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய தடை

பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்ப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டியது.

பீஜிங்,

தைவான் சென்றதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய அந்த நாடு தடைவிதித்துள்ளது. கடந்த மே மாதம் நியூசிலாந்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களான லாரா மெக்ளூர், டங்கன் வெப். மவுரீன் பக், டேவிட் வில்சன் ஆகியோர் 5 நாள் பயணமாக தைவானுக்கு சென்றனர்.

தொடர்ந்து அந்த நாட்டின் துணை அதிபர் சியாவ் பி-கிம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்த எம்.பி.க்கள் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்ப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 நியூசிலாந்து எம்.பி.க்களும் சீனா, ஹாங்காங் மற்றும் மெக்காவிற்குள் நுழைய பீஜிங் அரசு ஒரு ஆண்டுக்கு தடை விதித்துள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து சீனா இத்தகைய பயணத் தடையை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.