உலக செய்திகள்

நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு: 2021 ஜனவரியில் இறுதி விசாரணை

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் 29-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஜனவரியில் வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து அவர் லண்டன் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக, நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா அர்புத்நாட் முன்னிலையில், காணொலி காட்சி மூலமாக நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை 29-ந்தேதிவரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் இறுதி விசாரணை, ஜனவரி 7 மற்றும் 8-ந் தேதிகளில் மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி முன்னிலையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்