உலக செய்திகள்

நீர் மூழ்கி கப்பல் ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது.

சியோல்,

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிப்போம் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்க உதவுவோம் எனவும் பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் இடையேயான ஏற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் ஆசிய பசுபிக் பகுதியில் பாதுகாப்பு நிலையை கடுமையாக பாதிக்கும் என்றும் வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை வடகொரியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த ஒப்பந்தம் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்குமேயானால் தக்க பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...