உலக செய்திகள்

தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை - டிரம்ப் திட்டவட்டம்

தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரிய தீபகற்ப பகுதியில் வட, தென் கொரியாக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாலும், வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளாலும், தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்த நாட்டின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது.

ஆனால் சமீப காலமாக வடகொரியா, தென் கொரியா இடையேயும், அமெரிக்கா-வடகொரியா இடையேயும் சுமுக உறவு மலர்ந்து உள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தென் கொரியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இல்லை. அது (படை வாபஸ்) குறித்த திட்டம் இல்லை. எங்கள் பேச்சுவார்த்தை திட்டத்திலும் இந்த விவகாரம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு