உலக செய்திகள்

சீனாவில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சென் நிங் யாங் மரணம்

அடிப்படை துகள்கள் தொடர்பான சமநிலை விதிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 1957-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.

தினத்தந்தி

பீஜிங், 

சீனாவைச் சேர்ந்தவர் இயற்பியல் பேராசிரியர் சென் நிங் யாங். 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியலாளர்களில் இவரும் ஒருவர். அடிப்படை துகள்கள் தொடர்பான சமநிலை விதிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 1957-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.

இதன்மூலம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் சீனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறினார். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தலைநகர் பீஜிங்கில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 103.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்