உலக செய்திகள்

வட, தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை: அடுத்த மாதம் 27-ந் தேதி நடக்கிறது

வட, தென் கொரிய தலைவர்களின் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினத்தந்தி

சியோல்,

தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, பகை நாடுகளாக திகழ்ந்து வந்த வடகொரியாவும், தென்கொரியாவும் நட்பு பாராட்டத் தொடங்கி உள்ளன. இரு தரப்பு பகை உணர்வு மாறி நேசம் துளிர்த்து வருகிறது. இந்த நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேச முடிவானது.

இது தொடர்பாக இரு தரப்பு உயர் மட்டக்குழுவினரும் நேற்று எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள பான்முன்ஜோம் ஒருங்கிணைப்பு பெவிலியனில் சந்தித்துப் பேசினர். அதில் கிம் ஜாங் அன்- மூன்ஜே அன் பேச்சு வார்த்தையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை, பான்முன்ஜோமில் உள்ள தென்கொரியாவின் சமாதான இல்லத்தில் நடைபெறும்.

இரு தரப்பினரும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கொரியப்போருக்கு பின்னர் இந்த இல்லத்துக்கு வரக்கூடிய முதல் வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்தான் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த பேச்சுவார்த்தையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, இரு தரப்பு உயர் மட்டக்குழுவினரும் வரும் 4-ந் தேதி மீண்டும் கூடிப்பேசுவது என முடிவு செய்து உள்ளனர்.

கிம் ஜாங் அன்னும், மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசிய பிறகு, வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கிம் ஜாங் அன் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்புக்காக தான் ஆவலுடன் காத்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை