உலக செய்திகள்

எல்லைப்பிரச்சினை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு

எல்லைப்பிரச்சினை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பெருளாதார மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது உண்மை தான். ஆனால், கடந்த 40 வருடங்களில், எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கப்படவில்லை என்று மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது:- பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம். மோடியின் இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு