மாஸ்கோ,
ஈஸ்டர் எனும் மகத்தான பெருவிழாவில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உண்மையான மகிழ்ச்சியாலும், வாழ்வின் வெற்றியின் மீதான நம்பிக்கையாலும் அத்துடன் அன்பு, நன்மை மற்றும் நீதி ஆகியவற்றின் நிலையான ஆற்றலின் மீதான நம்பிக்கையை நிரப்புகிறது.
நம் முன்னோர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளையும், நிலையான ஆன்மீக மற்றும் அறநெறி மதிப்பையும் இலட்சியங்களையும் மையமாக கொண்டு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, மற்ற கிறிஸ்தவ பிரிவுகளுடன் இணைந்து, நமது பரந்த வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், குடும்ப மரியாதைகளை பேணுவதிலும், இளைய தலைமுறையினருக்கு கல்வி கற்பிப்பதிலும் ஆக்கப்பூர்வமான பங்கை செய்து வருகிறது.
மத அமைப்புகள், அரசாங்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், ரஷ்யாவில் மதங்களுக்கிடையிலான மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், சிறப்பு இராணுவ நடவடிக்கையில் பங்கேற்பவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிப்பதற்கும் விரிவான மற்றும் அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்கின்றன.
இந்த முக்கியமான மற்றும் பன்முக முயற்சிகள் மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவை என்று புதின் தெரிவித்தார்.
அதிபர் புதின் மற்றும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் ஆகியோர் கிறிஸ்து இரட்சகர் பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் விழிப்பு ஆராதனையில் கலந்துகொண்டனர். இந்த தெய்வீக ஆராதனையை மாஸ்கோ மற்றும் அகில ரஷியாவின் திருத்தந்தை கிரில் வழி நடத்தினார்.