உலக செய்திகள்

இந்தியாவுடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்:பாக்.ராணுவ தளபதி

இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்,

இஸ்லாமாபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறியதாவது;, இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமாகவே அமைதியான தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சின் மூலமாகவே தீர்வு காண முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.

உலகின் எல்லாப் பகுதியிலும் ஏதாவது ஒரு மோதல், போர் நடந்து கொண்டு உள்ளது. பேச்சுவார்த்தை மூலமாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்பதை பாகிஸ்தான் நம்புகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கும் இது பொருந்தும்என்றார் .

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த கருத்து அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...