உலக செய்திகள்

பாகிஸ்தான் சட்ட மந்திரி ராஜினாமா, போராட்டங்கள் விலக்கி கொள்ளப்பட்டது

போராட்டங்கள் வலுத்த நிலையில் பாகிஸ்தான் சட்ட மந்திரி சாகித் ஹமித் ராஜினாமா செய்தார். போராட்டங்கள் விலக்கி கொல்லப்பட்டது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் சட்ட மந்திரி ஜாகித் ஹமீது, தேர்தலின்போது வேட்பாளர்கள் மத அடிப்படையில் செய்து கொள்ள வேண்டிய பிரமாணம் தொடர்பான திருத்தம் ஒன்றை அவசர கதியில் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்காரணமாக நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 500 அதிரடிப்படை போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கு விரைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது அவர்கள் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வெடித்து விரட்டியடித்தனர். ஆனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

பாகிஸ்தானில் ஸ்திரமில்லா சட்டம் ஒழுக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ள நிலையில் அந்நாட்டு அரசு ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது. பாகிஸ்தான் ராணுவமும் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அந்நாட்டு அரசுக்கு உதவி அளிப்பதாக கூறியது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி அந்நாட்டு ராணுவ மற்றும் உளவுப்பிரிவு தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார். இருதரப்பு மோதல்களில் 6 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்சனையை தீர்க்க சட்ட மந்திரி ராஜினாமா என்ற ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் அப்பாசியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மந்திரியின் ராஜினாமாவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடந்து வந்த போராட்டங்கள் விலக்கி கொள்ளப்பட்டன. இருப்பினும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை