உலக செய்திகள்

இந்தியா விமானப்படை அதிரடி தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அவசர கூட்டத்திற்கு அழைப்பு

இந்திய விமானப்படை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்துள்ள நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இந்திய விமானப்படை அதிரடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ் -2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

12 போர் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படையின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விமானப்படை நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கியுள்ளார். சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்று இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை